தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படிப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள வாத்தி படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சியின் போது நடிகை சம்யுக்தா பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அவர் கூறியதாவது, நான் பாலக்காட்டை சேர்ந்த பெண் என்றாலும் தமிழில் பேசுவேன்.

எனக்கு தமிழ் தான் பிடித்த மொழி. எனக்கு என் பெயரின் பின்னால் சாதியை சேர்ப்பது பிடிக்காது. நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் என் பெயருக்கு பின்னால் சாதியை சேர்க்க வேண்டாம் என்று கூறிவிட்டேன். பத்திரிகையாளர்களும் என்னை சம்யுக்தா என்றே அழைக்கலாம் என்று கூறினார். மேலும் நடிகை சம்யுக்தா தன் பெயரின் பின்னால் மேனன் என்ற சாதி பெயரை சேர்க்க வேண்டாம் என்று கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.