டெல்லியில் ஷாதரா நகரின் பல்பீர் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையத்தில் பிரௌசிங் செய்தபோது தற்செயலாக ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். அந்த பெண் தன்னை மசாஜ் செய்பவர் என கூறியதை தொடர்ந்து அவர்கள் இருவரும் வாட்ஸப்பில் தொடர்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் கிஷோரை  கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சிக்னேச்சர் பாலம் அருகே வரும்படி அந்தப் பெண் அழைத்துள்ளார். கிஷோர் அங்கு சென்றபோது மற்றொரு நபரை கிஷோருக்கு அந்த பெண் அறிமுகம் செய்து வைத்து நண்பரின் வீட்டிற்கு செல்வோம் எனக்கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பின் கிஷோரும் அந்த பெண்ணும் தனியாக இருந்தபோது அறை கதவு தட்டப்பட்டது. அப்போது நான்கு பேர் வாசலில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் குற்ற பிரிவு போலீசார் உடையும், மற்றொருவர் என் ஜி ஓ அமைப்பு உறுப்பினர் போலவும், மற்றொருவர் போலீசார் சீருடையிலும், தன்வந்தர் போன்று ஒருவரும் நின்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நான்கு பேரும் கிஷோரிடம் படம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது கிஷோர் பணம்  தர மறுத்ததால் அவருக்கு அடி, உதை கிடைத்துள்ளது. மேலும் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்வோம் என கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிஷோரின் மொபைல் போனை பறித்து தரவுகளை அழித்துள்ளனர். அதன் பின் கிஷோரை காரில் ஏற்றி  சென்றபோது கிஷோர் பணம்  பெற ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் காவல்துறை  ஆய்வாளர் உடையிலிருந்து அந்த நபர் காரை நிறுத்தியபோது காரில் இருந்து குதித்த கிஷோர் கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றி உண்மையான போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரிடமிருந்து கார், மொபைல் போன் மற்றும் போலீசாரின் சீருடை பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.