மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர்பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது இது தொடர்பாக பேசிய அமைச்சர் கீதாஜீவன், பெண்கள் பாதுகாப்புக்கு கிளிசரின் கண்ணீர் வடித்தவர் மணிப்பூர் விவகாரத்தில் எங்கே சென்றார்? மணிப்பூர் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கடமையை செய்ய வேண்டும். மேடைகளில் பெண்களை விமர்சித்தால் விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம் இதை கண்டும் காணாமல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.