உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டர் 62 பகுதியைச் சார்ந்தவர் அஜய் குமார். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக ஷிக்கு (Chekku) என்று பெயரிடப்பட்ட பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் 24ஆம் தேதியிலிருந்து பூனை மாயமாகி இருக்கிறது. இந்த நிலையில் காணாமல் போன வளர்ப்பு பூனை குறித்து தகவல் தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று பூனை வளர்ப்போர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த போஸ்டரில், ஒன்றரை வயதான ஆண் பூனையின் பெயர் சீக்கு என்றும், அடையாளமாக கழுத்து பகுதியில் வெள்ளை முடி இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பூனையை கண்டால் தகவல் தர வேண்டிய செல்போன் என்னும் அதில் இடம் பெற்றுள்ளது.