மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. இந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனிடையே பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

போக்குவரத்து தடை, மின் தடை உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்பட்ட காய்கறிகளும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் அழுகும் நிலையில் உள்ளன.