நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் 46வது சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி வளாகத்தில்நடந்துவருகிறது. ஜனவரி 6ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு, 18,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வெகு விமர்சையாக நடந்துவந்த இந்த கண்காட்சி இன்றோடு நிறைவடைகிறது. மிஸ் செய்தால் அடுத்த ஆண்டுவரை கண்காட்சிக்கு காத்திருக்க வேண்டும்.