புதுச்சேரி மாநில புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபி யாக செயல்பட்டு வந்த மனோஜ் குமார் லால் தற்போது டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதுச்சேரிக்கு புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் ஐபிஎஸ் உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டிஜிபியாக இருந்த மனோஜ் குமார் லால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார். இதனைப் போலவே மிசோரம், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் டிஜிபிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.