புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியாகினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் வந்த மருதா காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் பலியானார்.