இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டையை போலவே ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இத்தகைய புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கு லட்சக்கணக்கான நபர்கள் அண்மையில் விண்ணப்பித்தனர். இவ்வாறு விண்ணப்பித்த நபர்கள் 18 வயது கீழ் உள்ளவராக இருக்கக் கூடாது, அரசு வேலையில் இருக்கக் கூடாது, வருமான வரி செலுத்தக் கூடாது, நான்கு சக்கர வாகனம் இருக்கக் கூடாது மற்றும் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது என பல விழிகள் அடிப்படையாகக் கொண்டுவரப்பட்டன.

இந்த விதிகளின்படி புதிய ரேஷன் கார்டுக்கு 2024 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலை உத்தரப்பிரதேசம் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தங்களுடைய பெயர் உள்ளதா என்பதை வீட்டிலிருந்தபடியே உணவு மற்றும் வழங்கல் துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று அறிவிப்புகள் என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.