மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதி வேட்பாளராக அண்ணாமலை தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி நடந்துள்ளது என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் பேசுகையில், Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக நீதிமன்ற பயன்பாட்டிற்கான India Court Fee பத்திரம் மூலம் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.