இந்திய கடற்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திட்டம் 75 -ன் கீழ் ஆர்.எஸ் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டும் பணி ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கியுள்ள நிலையில் கல்வாரி, கந்தேரி, கரன்ஜ் வேலா, ஐ.என்.எஸ், ஆகிய நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டம் 75 -ன் கீழ் ஐந்தாவது நீர்மூழ்கிக் கப்பலான வகிர் மும்பை மஜ்காவ் கப்பல் கட்டும் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கடற்பயிற்சியை தொடங்கியது.

இது கடந்த மாதம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 23-ஆம் தேதி இந்த கப்பல் முறைப்படி கடற்படையில் இணைய உள்ளது. கடற்படை தளபதி ஹரிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த கப்பலை நாட்டிற்கு அர்ப்பணிக்கின்றார். 1973 -ஆம் ஆண்டு வகிர் எனும் பெயரில் கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட்டு அது கடந்த 2021 -ஆம் ஆண்டு ஓய்வு பெற்றது. இந்நிலையில் அதே பெயரில் புதிய அவதாரத்துடன் வகிர் கடற்படையில் இணைகிறது.

இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்நாட்டில் கட்டப்பட்டதாகும். அதே போல் கடலில் செல்லும் எதிரி நாட்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை இது மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அதாவது கடலின் மேற்பரப்பு கடலில் மூழ்கிய படியும் போர் புரியும் தன்மை உள்ளது. மேலும் உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளை இது திறம்பட மேற்கொள்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கின்ற நிலையில் ஐ.என்.எஸ் வகிர் இந்திய கடற்படையின் போர் திறனுக்கு மேலும் பல சேர்ப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.