பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.