தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், ஊழலை ஒழிப்பதைப் பற்றிப் பேசி வருவதை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். “தன் படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுவதைப் பற்றி இதுவரை ஒரு கேள்வி கூட கேட்காத விஜய், ஊழலை எப்படி ஒழிப்பார்?” என்று அவர் கிண்டலாகக் கேட்டுள்ளார். சொந்தப் படத்தாலேயே மக்களுக்குப் பாதிப்பு வரும்போது அமைதியாக இருப்பவர், ஊழலுக்கு எதிராகப் பேசுவது வேடிக்கையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன் படங்களுக்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்பதை கேள்வி கேட்காத விஜய் ஊழலை எப்படி ஒழிப்பார்?
– டிடிவி தினகரன்.pic.twitter.com/c8FPRsI36j
— Blue Sattai Maran (@tamiltalkies) January 26, 2026
அதுமட்டுமில்லாமல், “முதலில் வீட்டிற்குள் இருந்து கொண்டு அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு, வெளியில் வந்து மக்களைச் சந்தியுங்கள்; வீட்டிற்குள் இருந்து கொண்டு எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்?” என்றும் அவர் விஜய்க்கு நேரடி சவால் விடுத்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகையும், அவரது ஊழல் எதிர்ப்பு முழக்கங்களும் வெற்றுப் பேச்சுதான் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக டிடிவி தினகரன் ஆவேசமாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
