லிதுவேனியா நாட்டை சேர்ந்த ஐடாஸ் என்ற நபர் சமீபத்தில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி தரையில் விழுந்துள்ளார். ஆனால் இதில் சந்தேகம் அடைந்த உணவகத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஐடாஸ் இதையேதான் வாடிக்கையாக வைத்திருந்தார். கிட்டதட்ட 20 உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு அதற்கான பில்லை செலுத்தும் நேரத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நடித்து உணவகத்தின் உரிமையாளர்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.