தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்கும் படி போலீசருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், தொழிலாளர்களின் பெயர், பணிபுரியும் நிறுவனம், சொந்த ஊர் மற்றும் வயது உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க வேண்டும். விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணித்து ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் இடத்தில் இரவு மற்றும் பகல் ரோந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் ஆணையர் மற்றும் எஸ் பி களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.