நடிகரும், சின்னத்திரை பிரபலமுமான KPY பாலா, தமிழகத்தில் உள்ள பலதரப்பு மக்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்து வருகிறார்.குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா. இவர் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துவருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

இந்த நிலையில், பிறருக்கு உதவி செய்துகொண்டே இருந்தால் சிக்னலில் பிச்சை எடுக்கும் நிலை வரும் என சிலர் தன்னை திட்டுவதாக வேதனை தெரிவித்தார். மேலும் அந்த நிலை வந்தால், நிச்சயம் அந்த சிக்னலில் நான் உதவி செய்த ஆம்புலன்ஸ் வந்து என்னை காப்பாற்றும் எனவும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.