திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திலகாப்பட்டி பகுதியில் முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி தீபாவிற்கு வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சைக்கு பிறகு தீபா பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த நான்காம் தேதி குழந்தை திடீரென உயிரிழந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே முருகவேலின் வீட்டிற்கு அருகே குழந்தையின் உடலை புதைத்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த ஆர்.கோம்பை கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வேடசந்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து மீண்டும் அதே இடத்தில் புதைத்தனர். மேலும் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததா? அல்லது பெற்றோரை கொலை செய்து புதைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.