டெல்லியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் 16 வயது சிறுவன் ஒருவன் ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனிடம் பிரியாணி வாங்குவதற்கு காசு கேட்டுள்ளார். ஆனால் அவர் காசு கொடுக்க மருத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 16 வயது சிறுவன் அவரை மூச்சுத் திணற செய்து நிலைகுலைந்து கீழே விழுந்த சிறுவனை 55 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளில் கொலை செய்த பிறகும் சடலத்தின் அருகே நின்று 16 வயது சிறுவன் நடனம் ஆடுவது பதிவாகியிருந்தது.