புகழ்பெற்ற பாடகி பிரபா ஆத்ரே (92) இன்று காலை மாரடைப்பால் காலமானார். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்ற “கிரானா கரானா” இசை பள்ளியைச் சேர்ந்த இவர், இந்திய அரசின் உயரிய விருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார். 1932இல் பிறந்த ஆத்ரே, இசை கற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்து, இசைத்துறைக்குள் நுழைந்தவர். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.