தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோபாலா. இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் மனோபாலா மருத்துவமனையில் இருக்கும் போது நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகனுடன் உரையாடும் ஒரு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது மனோபாலா ஆஞ்சியோ அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நடிகர் மனோபாலாவை நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்துள்ளார். அது தொடர்பான புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும் மனோபாலா அறுவை சிகிச்சை முடிவடைந்து தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.