பத்து தல திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிலம்பரசன் இப்போது டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்போது  படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. ஆகவே விரைவில் இந்த படத்தின் சூட்டிங் துவங்குகிறது.

இந்நிலையில் சிம்பு தன் 49வது படத்திற்கு கதை கேட்கும் பணிகளில் இறங்கி உள்ளார். அண்மையில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி திரைப்படமான போர் தொழில் படத்தின் டைரக்டர் விக்னேஷ் ராஜை அழைத்து சிம்பு கதை கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.