தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதோடு வசூலிலும் சாதனை படைத்தது. இதனால் பல தயாரிப்பாளர்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு வலை வீசுகிறார்கள். சமீபத்தில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பிரதீப் ரங்கநாதனுக்கு வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதனுக்கு சிரஞ்சீவி சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா குமார் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கொரோனா குமார் படத்தில் தற்போது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.