கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலகங்கா விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச புத்தக கண்காட்சி விழா நடைபெறும். அதன்படி 14-வது சர்வதேச புத்தக கண்காட்சி விழா இன்று தொடங்கியது. இந்த விழாவினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி காந்தாரா‌ படத்தை இயக்கி நடித்த ரிஷப் செட்டி, கேஜிஎஃப் நாயகன் யஷ், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி உள்ளிட்ட பல கன்னட பிரபலங்களை சந்தித்து பேசினார். மேலும் கன்னட சினிமாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்தும் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார்.