சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகிற 20-ம் தேதி ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனை கூட்டமானது சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் அ.தி.மு.க அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்களுடன் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வருகிற 20-ஆம் தேதி சென்னை எக்மோர் பாண்டியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பன்னீர்செல்வம்  தரப்பு மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.