தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில்  தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் whatsapp போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதித்து அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு நேரத்தில் வினாத்தாள் சோசியல் மீடியாவில் லீக் ஆகாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.