மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது . தற்போது இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்ற காரணத்தினால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பொது தேர்வு இல்லாமல் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டதால் தமிழக மாணவர்கள் தற்போது மதிப்பெண்கள் குறிப்பிட முடியவில்லை. மேலும் இதற்கு விண்ணப்பிப்பதற்கு வருகிற மார்ச் 12-ம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில் தமிழக அரசு தலையிட்டு விலக்கு பெற்று தர மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.