தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி இதற்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்பு பணிக்காக தமிழக முழுவதும் 2811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டது. மின்நுகர்வோரின் வசதிக்காக ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின் புதன்கிழமை வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அதனால் இன்று மாலைக்குள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணையுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.