வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். தில்லியில் இருந்து தனி விமான மூலம் பிப்ரவரி 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் இவர் மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

அதன் பின் ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் கோவையிலிருந்து பிப்ரவரி 19-ஆம் தேதி புறப்பட்டு தில்லி செல்கிறார். இந்நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற பிப்ரவரி 18,19 ஆகிய தேதிகளில் மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.