ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 1-ம் தேதி செல்ல தடை விதித்து தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி-20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டிற்கு ஆஸ்திரேலியா, பிரேசில், அர்ஜென்டினா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலாப் பயணிகள்  பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.