வருகிற பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வுகள் கணினி வழி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டுள்ளதாவது, ஆசிரியர் தகுதி தேர்வில் இரண்டாம் தாளுக்கான கணினி வழி தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 3.2.2023 முதல் 12.2.2023 வரை 2 வேலைகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வு வாரிய இணையத்தில் கடந்த மூன்றாம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இரண்டாம் தாளுக்கான  கணினி வழி தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரிய  இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வு கூட நுழைவு சீட்டு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் தங்களது பயன்பாட்டு முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளீடு செய்து தேர்வு கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வு வாரியம் கூறியுள்ளது.