பெங்களூருவில் 35 வயதுள்ள ஒரு பிசியோதெரபிஸ்ட் தன் தாய்க்கு 30 BP மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாயுடன், அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிக பிபி மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதன்பின் வீட்டில் மயங்கி கிடந்த தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை சூட்கேஸில் அடைத்தார்.

அதோடு உடலை ஒரு சூட்கேஸில் வைத்து ஆட்டோ ரிக்ஷாவில் போலீஸாரிடம் எடுத்துச் சென்றுள்ளார். அதாவது, நான் என் அம்மாவை கொன்றுவிட்டேன். உடல் சூட்கேஸில் இருக்கிறது என பிசியோதெரபிஸ்ட் கூறினார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பியா பாலின் என்பவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.