சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, வம்சம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சந்தியா. இவர் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற  சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

இந்த நிலையில் சமீபத்தில் கடந்த 2006 ஆம் வருடம் கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு என்ற டைட்டில் பாடல் எடுக்கும் பொழுது கோயில் யானையோடு படப்பிடிப்பு நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. யானை மிதித்து மயத்திற்கு சென்ற இவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று கூறியிருக்கிறார். இவர் மயங்கி விழுந்ததும் தயாரிப்பாளர், சில டான்ஸர்கள் அவரை தூக்கி கொண்டு சென்றுள்ளார்கள்.

அப்போது ஒருவன் மட்டும் இவருடைய மார்பில் கை வைத்து கேவலமான காரியத்தை செய்திருக்கிறார். பிணம் மாதிரி கிடந்த என்னிடம் இப்படி நடந்து கொண்டது நினைத்து பிணத்தை கூடவா இப்படி செய்வார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அந்த இளைஞர் யார் என்று தெரியாது என்றும், இதிலிருந்து மீண்டு வருவதற்கு அதிக நாள் ஆனதாகவும் கூறியிருக்கிறார்.