விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 இல் டைட்டில் வின்னர் என்பதில் மாயா மற்றும் அர்ச்சனா இடையே கடும் போட்டி நிலவியது. வெற்றியாளராக அர்ச்சனாவும், ரன்னராக மணிச்சந்திராவும் தேர்வாகியுள்ளனர்.

மாயா ரன்னராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. பிரதீப்புக்கு ரெட் கார்டு வேண்டாம் என கூறிய அர்ச்சனாவுக்கு ஆதரவு தெரிவித்த பிரதீப் ரசிகர்கள் மாயாவுக்கு ரன்னர் வாய்ப்பு கூட கிடைக்க விடாமல் செய்ததாக தெரிகிறது.