நடிகரும், தேமுதிக தலைவரும் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு பலருக்கும் பெரிதும் நீங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். தொடர்ந்து வடிவேலு பற்றி பேசிய அவர், “சில நேரங்களில் நாம் தவறு பண்ணலாம். விஜயகாந்த் – வடிவேலுவுடன் ஏதோ ஒரு வகையில பிரச்சினை வந்திருக்கலாம்.

விஜயகாந்த் கூட அதனை பெரிதாக எடுத்திருக்க மாட்டார் என கூறியுள்ளார். மேலும் உண்மையிலேயே வடிவேலு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த போகலாம், போனால் என்ன நடக்கும் என நினைத்திருக்கலாம். வீட்டில் உட்கார்ந்து கூட வடிவேலு அழுதிருக்கலாம். அவரும் ஒரு மனிதர் தான்” என தெரிவித்தார்.