நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 14 வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 14வது தவணை பெற இகேஒய்சி விவரங்களை இன்றைக்குள் விவசாயிகள் புதுப்பித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான அப்டேட் செய்தால் மட்டுமே விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும். எனவே விவசாயிகள் அனைவரும் இகேஒய்சி விவரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் விவசாயிகள் உதவி எண் – 155261 அல்லது 1800115526 அல்லது 011-23381092 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.