விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளை கண்டித்து வருகிற பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு கூட்டணி கட்சி தலைவர்களும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இது குறித்து கூறியதாவது, தமிழ்நாட்டின் வன்முறைகளை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதே சனாதன சக்திகளின் சதி நோக்கம். தரங்கெட்ட பேச்சுக்கள், ஆபாசமான விமர்சனங்கள், வீம்புக்கு வம்பிழுக்கும் வீணான அவதூறுகள் மூலமாக சமூக அமைதியை கெடுப்பது பா.ஜ.கவின் செயல் திட்டம். மக்கள் விரோத பாசிச பா.ஜ.க உள்ளிட்ட சனாதன சக்திகளை கண்டுபிடித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னையில் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என  வி.சி.க தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.