புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த தேடுதல் வேட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.