திருவள்ளூர் பாஜக பொறுப்பாளர் மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பாலியல் புகாருக்குள்ளான அவருக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் பதவி வழங்கியதை கண்டித்து அப்பெண்ணின் ஆதரவாளர்கள் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கமலாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.