பிரபல வங்க மொழி நடிகையாக வலம் வருபவர் பாயல் சர்க்கார். இவர் பல்வேறு இந்தி திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து உள்ளார். நடிப்பதோடு மட்டுமின்றி இவர் பாஜகவில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கொல்கத்தாவிலுள்ள காவல் நிலையத்தில் பாயல் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில், “என் செல்போனுக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் வந்தது. அந்த எண்ணை ஆராய்ந்த போது அது ஜிம் பயிற்சியாளர் என்பது தெரியவந்தது. அந்த எண்ணை நான் பிளாக் செய்துவிட்டேன். உடனடியாக மற்றொரு நம்பரிலிருந்து ஆபாச குறுந்தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்பினார்.

அவரது ஆசைக்கு இணங்கவில்லை எனில் என் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.