ஓபிஎஸ் மகன் ஒபி ரவீந்திரநாத் மற்றும் பாலா மனைவி மலர்க்கும் இடையே உறவு குறித்து காயத்ரி தேவி பேசி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரவீந்தர்நாத் எங்களுடைய குடும்ப நண்பர். கொடைக்கானல் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்து அவரை தெரியும். கடந்த பத்து வருடங்களாக நல்ல குடும்ப நண்பர். அதேபோல அவருடைய மனைவி ஆர்த்தி எந்தவொரு குடும்ப பிரச்சினை என்றாலும் என்னிடம் அவர்கள் பேசுவது வழக்கமான ஒன்றுதான். பாலாவின் மனைவி மலர், ஆனந்தி, நான் எல்லோரும் நல்ல நண்பர்கள்.

இது எங்களுக்கு தெரியாமலேயே மலருக்கும் ரவீந்திரநாத்துக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு நிலையில் மலர் பணத்துக்காக அபார்ஷன் செய்வது போல நடித்து மருத்துவமனையில் இருந்தார். மேலும் என்னையும் அவருக்கு ஆதரவாக ரவீந்திரநாத்திடம் பேச சொன்னார். அவர் நடிப்பதை தெரிந்த நான் அவரிடம் பேசுவதை விட்டு விட்டேன். இது பற்றி ரவீந்திரநாத்திடம் மலர் உங்களை ஏமாற்றுவதாக நடிக்கிறார் என்று சொன்னேன் அதற்கு பிறகு தான் எனக்கு பிரச்சினை வரத் தொடங்கியது என்று அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.