தமிழ் சினிமா ரசிகர்களை தனது மிரட்டலான நடிப்பால் கவர்ந்த டேனியல் பாலாஜி நேற்று (மார்ச் 29) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாலாஜிக்கு இன்று அஞ்சலி செலுத்த வந்த கூல் சுரேஷ், அங்கிருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனது நண்பன், படத்தில் மட்டும் தான் வில்லன் நிஜத்தில் ஹிரோ, இறந்தும் மற்றவருக்கு உதவியிருக்கிறார். பாலாஜி போல் மனசு யாருக்கும் வராது” என்றார்.