2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவினர் ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மதுரையில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் போது ஜல்லிக்கட்டு காளை அண்ணாமலை நோக்கி முட்ட பாய்ந்து வந்தது. இதனை பார்த்து மிரண்ட பாஜகவினர் ‘பாரத் மாதாகி ஜே’ கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.