சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக  மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை சுற்றிப்பார்க்க தினமும் ஏரளமானவர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது   அதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே உணவை உண்ணக்கூடிய வகையில் தயார் செய்யப்படும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.