நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவை பாரத் என பெயர் மாற்றுவதில் தவறு ஏதும் இல்லை என்று ஆந்திரா அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தரிசனம் செய்தார். அதன் பிறகு கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரோஜா, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது நல்ல முடிவு என்றும் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ளார்.