குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ராத்தோடு – நீதாபென் தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். இவர்களின் மகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் காதலித்த நபரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இதனால் ராத்தோடு குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த நான்கு பேரும் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இதில் ராத்தோடு அவரது மூத்த மகன் ஹர்ஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நீதாபென் மற்றும் இளைய மகன் ஹர்ஷில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ராத்தோடு மகளின் கணவர் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.