பிரபல கர்நாடக பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கச்சேரிக்காக லிவர்பூல் சென்று இருந்த அவருக்கு திடீரென மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு இங்கிலாந்திலே சிறுதுளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ மீண்டும் வருவார் என்று நம்புவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.