மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கிரிஜா சங்கர் சர்மா என்ற இளைஞர், கொடிய விஷமுள்ள ராஜநாகத்தை மிக சாதாரணமாகத் தனது மடியில் வைத்துப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவசாயப் படிப்பு படிக்கும் இந்த இளைஞர், அண்டை வீட்டில்  புகுந்த பாம்பைப் பிடிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பாம்பு அவரோடு விளையாடிய நிலையில், தனது குடும்பம் பல தலைமுறைகளாக நாக தேவதையை வழிபடுவதால் அந்தப் பாம்பு தனக்குத் தீங்கு செய்யவில்லை என்று அவர் கூறினார். இந்தக் காட்சியைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் மிகுந்த அச்சமடைந்தாலும், அந்த இளைஞர் பாம்புகளைக் கையாள்வதில் உள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கவும் செய்துள்ளார்.
<a href=”http://

“>
பாம்புகள் மரியாதையுடன் நடத்தப்பட்டால் அவை யாரையும் தாக்காது என்பது அவரது நம்பிக்கையாக இருந்தாலும், பொதுமக்கள் யாரும் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்த நிலையில், தற்போது இந்த வீடியோ தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.