பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பாம்புகளுக்கு பற்களில் அதிகம் விஷம் இருப்பதால் தன்னுடைய இறையை எளிமையாக வேட்டையாடி விடுகிறது. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல முயற்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிடையாது. எங்கு மனிதர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் தான் இவ்வாறு அவை மனிதர்களை தாக்குகின்றன.

பாம்புகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தீமை தான் விளைவிக்கின்றன. வயலில் பாம்புகள் எலிகளை கொள்வதால் விவசாயிகளுக்கு உதவியாக இருந்தாலும் இது இவர்களின் உயிருக்கும் கூட அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது. பாம்பின் விஷத்தில் இருந்து ஒரு சில கொடிய நோய்களுக்கு மருந்துகளும் கண்டறியப்படுகின்றன. அதேசமயம் பாம்புகளை அடித்துக் கொள்வது அல்லது அவற்றை பிடிப்பது ஆகியவற்றை விட அவற்றை விரட்டுவது தான் பாதுகாப்பானது. அதன்படி கடுகு எண்ணையை எரிப்பதன் மூலமாக வட மாநில விவசாயிகள் பாம்புகளை எளிதில் விரட்டுகின்றனர். குறு பரப்பளவு கொண்ட நிலப்பரப்பிலான வயலில் விவசாயிகள் தங்கினாலும் கடுகு எண்ணெயை எரிப்பதால் அவர்கள் பக்கம் பாம்புகள் வருவதில்லை.