இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் வேடிக்கையாகவும் சில வீடியோக்கள் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். அவ்வகையில் எலி ஒன்று பாம்பு ஒன்றிடம் வசமாக சிக்கிக்கொண்ட நிலையில் இறுதியாக சாமர்த்தியமாக தப்பித்த காட்சி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டிருப்பதால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயம் கொள்வார்கள்.

பாம்புகள் சில நேரங்களில் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரத்தில் கோபத்தையும் வெளிகாட்டுகின்றது. அதனைப் போலவே இதன் வேட்டையும் பயங்கரமாக இருக்கும். அவ்வகையில் பாம்பு ஒன்று எலியை வேட்டையாடி சாப்பிட நினைத்துள்ளது. ஒரு கட்டத்தில் பாம்பின் வாயில் சிக்கிக்கொண்ட எலி தன்னுடைய காலினால் பாம்பை எட்டித் தள்ளி எஸ்கேப் ஆகியுள்ளது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.