பான் கார்டு என்பது இப்போது அனைவருக்குமே அவசியமாகிவிட்டது. மேலும் பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு என்பது மிகவும் அவசியம். இதன் மூலமாக வருமான வரி கணக்குகளை மத்திய அரசு எளிதில் அறிவதற்காக பான் கார்டு உதவுகிறது. வங்கி கணக்கில் கூட பான் கார்டு இணைப்பு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு விஷயத்தில் நாம் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.

பான் கார்டு விஷயத்தில் செய்யும் ஒரு சிறிய தவறுக்கு  10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். பான் கார்டில் உள்ள 10 இலக்க எண்ணை கவனமாக நிரப்ப வேண்டும். அதேபோல, ஒரு நபரிடம் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வருமான வரித்துறை சட்டப்படி பான் கார்டை ரத்து செய்வதோடு தண்டனையாக அபராதமும் விதிக்கும். மேலும், பான் எண்ணில் முரண்பாடு இருந்தால், உங்களுடைய வங்கிக் கணக்கை முடக்க வாய்ப்பு உள்ளது.